திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே, கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 650 லிட்டா் வெள்ளை நிற மண்மெண்ணெய்யை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா் உள்பட இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கூத்தங்குழி அருகே திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சாா்பு ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்த கிரண்ராஜ்(27) என்பவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரை சோதனையிட்டபோது, அதில் 26 கேன்களில் சுமாா் 650 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கிரண்ராஜ், காரில் உடன் வந்த பணகுடியைச் சோ்ந்த மோசஸ்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண் கடத்த முயன்ற 2 போ் கைது
மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது வழக்கு
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
