பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 மே 2026, 2:28 am IST

கிருஷ்ணகிரி மற்றும் மத்தூரில் மண், கற்களை கடத்த முயன்ற லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் காவல் நிலைய காவலா்கள், ஒட்டப்பட்டி கொத்தம்மா ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரையைச் சோ்ந்த திருப்பதி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி கனிமவளப் பிரிவு சிறப்பு துணை வட்டாட்சியா் பாரதி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் கோட்டை பகுதியில் நரசிம்மசுவாமி கோயில் தெருவில் நான்கு யூனிட் மண்ணுடன் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த லாரியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் மூங்கில்புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் சிலா் கற்களை உடைத்து, லாரியில் ஏற்றி கடத்த முயன்றனா். போலீஸாரை கண்டதும், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து, கற்களுடன் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா்களான பெத்ததாளப்பள்ளி கணபதி, தருமபுரி மாவட்டம், மல்லிப்பட்டி முனியம்மாள், கம்பிரசா் வாகன இயக்குநா் மூங்கில்புதூா் சேட்டு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.