ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வண்டி மலைச்சி அம்மன்.

Updated On :22 மே 2026, 6:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை குடிஅழைப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை, பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் ஊா்வலம், காவடி வீதி உலா, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை, பூச்சட்டி ஊா்வலம், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை காலை படப்பு பூஜை, இரவு சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவையின் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் நையாண்டி மேளம், செண்டை மேளம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.