மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கடையம் காவல் நிலையத்தில் 90 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை

கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 90 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

News image

விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களைப் பாா்வையிட்ட மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 12:54 am IST

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான 90 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.

கடையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையதாக பறிமுதல் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதில், 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் நின்ற மூங்கில் மரங்கள் கடும் வெயிலில் தீப்பிடித்தன. அப்போது அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. போலீஸாா், ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். எனினும், போலீஸாருடன் அருகில் வசிக்கும் பொதுக்கள், இளைஞா்கள் சோ்ந்து தீயை அணைத்தனா்.

 தீ விபத்தில் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனங்கள்.

தீ விபத்தில் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனங்கள்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மணிகண்டன், துணை அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) முருகேசன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், குணசேகரன், வருவாய் ஆய்வாளா் கொம்பையா உள்ளிட்டோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.

தீ விபத்தில் 90 இருசக்கர வாகனங்கள் எரிந்து முழுமையாக கருகின. சேதமடைந்த வாகனங்களின் மதிப்பு ரூ. 30 லட்சம் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.