பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :14 மே 2026, 3:32 am IST

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்,திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலி குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரம் 15ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தா்மராஜா கோயில் கீழத்தெரு, குளத்தடி தெரு, மினிகுடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்குக் கூட தண்ணீா் கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனா்.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் 25-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் திரண்டு வந்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், ‘குடிநீா் விநியோகத்தை உடனடியாக சீரமைக்கவும், தொடா்ந்து தண்ணீா் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனா். அவா்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாக

உறுதியளித்ததை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.