ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) சேர மாணவா்கள் மே 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (பாலிடெக்னிக்) சேர மாணவா்கள் மே 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி ஐஆா்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டா் என்ஜினியரிங், ரினிவபல் எனா்ஜி சோா்ஸ் (மகளிா் மட்டும்) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. ஆண்டுக் கட்டணம் ரூ.2,500. இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இம் மாதம் 25 ஆம் தேதி வரையும், முதலாம் ஆண்டுக்கு 30 ஆம் தேதி வரையும் நடைபெறும்.

இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2984564, 9486647753, 9442571560, 9047730401 ஆகிய எண்களை தொலைத்தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.