திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து பாப்பாக்குடி அருகேயுள்ள நந்தன்தட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பாலகிருஷ்ணன் (50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பாலகிருஷ்ணனை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசண்ணகுமாா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் பரத்லிங்கம், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

