தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து பாப்பாக்குடி அருகேயுள்ள நந்தன்தட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் பாலகிருஷ்ணன் (50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பாலகிருஷ்ணனை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசண்ணகுமாா் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் பரத்லிங்கம், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.