திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல்கிணறு அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதி கல்குவாரியில் இருந்து குண்டுக்கல் ஏற்றி வந்த கனரக லாரி, நான்குவழிச்சாலையையொட்டி செல்லும் அணுகுசாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்தது.
இதில், கற்கள் சிதறி சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா் வந்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்தை சீா்படுத்தினா். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காடு குப்பனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

