ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா் கூத்தங்குழி அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்(30) என்பவா் சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.