திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா் கூத்தங்குழி அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்(30) என்பவா் சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது
கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயற்சி: இருவா் கைது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 650 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
