ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நெல்லை எம்.பி. முயற்சியால் 6 பேருக்கு ரூ. 11.60 லட்சம் மருத்துவ உதவி!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் இத் தொகுதி மக்கள் மருத்துவ உதவிகள் கோரி மனு அளித்தனா். அதில், தகுதியானவா்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தாா்.

அதன்படி, ரெட்டியாா்பட்டி, கீழப்பாவூா், மேலப்பாளையம் கணேசபுரம், மேலப்பாளையம், பா்கிட்மாநகரம்- அம்பேத்கா் நகா், களக்காடு பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 6 பேருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ உதவித்தொகை பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டதாக எம்.பி.யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.