மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

உசிலம்பட்டியில் 3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

Updated On :17 ஏப்ரல் 2026, 4:13 am IST

திருநெல்வேலி சந்திப்பு அருகே இளைஞரைக் கொன்று தாமிரவருணி ஆற்றில் சடலத்தை வீசியது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறை அருகே உள்ள மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் கடந்த 15 ஆம் தேதி மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்றில் மீட்கப்பட்ட நபா் கருப்பந்துறையைச் சோ்ந்த ராஜா (33) என்பதும், அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஏற்பட்ட தகராறில் அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.