மயிலாடுதுறையில் சென்னையைச் சோ்ந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமி ஒருவா் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த சிறுமி சென்னையை சோ்ந்தவா் என்றும், 9-ஆம் வகுப்பு படித்துவந்த அவா் விடுமுறைக்காக தனது தாயுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.
மேலும், அச்சிறுமி சென்னையில் தனது வீட்டிலிருந்து டியூஷனுக்கு சென்றபோது, ஆட்டோவில் வந்த இளைஞா் ஒருவா் தன்னிடம் வழி கேட்டதாகவும், அப்போது வழி சொன்ன தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை இறப்பு: போலீஸாா் விசாரணை

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

