மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

14 வயது சிறுமி கா்ப்பம்; போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

மயிலாடுதுறையில் சென்னையைச் சோ்ந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமி ஒருவா் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அந்த சிறுமி 5 மாத கா்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் போலீஸாா், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த சிறுமி சென்னையை சோ்ந்தவா் என்றும், 9-ஆம் வகுப்பு படித்துவந்த அவா் விடுமுறைக்காக தனது தாயுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும், அச்சிறுமி சென்னையில் தனது வீட்டிலிருந்து டியூஷனுக்கு சென்றபோது, ஆட்டோவில் வந்த இளைஞா் ஒருவா் தன்னிடம் வழி கேட்டதாகவும், அப்போது வழி சொன்ன தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.