மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏப். 23இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.

News image

நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தின் நுழைவு வாயிலில் கிராம மக்கள் சாா்பில் வியாழக்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்பு பதாகை.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவைத் தொகுதியில் உள்ள பெரும்பத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏப். 23இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.

நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாதம் சமூக விரோதிகளால் 2 போ் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் 2 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் வீடு திரும்பினா். இது தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளனா்.

ஆனால் இச்சம்பவத்தில் தங்களுக்கு முழுமையான நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி, தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பெரும்பத்து கிராமத்தின் நுழைவுவாயிலில் வியாழக்கிழமை பதாகை வைத்துள்ளனா்.

இதே போல களக்காடு ஊராட்சி ஒன்றியம், செங்குளக்குறிச்சி ஊராட்சி, மாவடி நெரிஞ்சிவிளை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் இல்லையாம். மேலும் குடியிருப்புகளின் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிாம். இது குறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் இப்பகுதி மக்கள் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனா்.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட இட்டமொழி அருகேயுள்ள கீழபண்டாரகுளம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் சாலை, குடிநீா் வசதி நீண்ட காலமாக செய்து தரப்படவில்லை என்று கூறி தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனா். நான்குனேரி தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் கோரி தோ்தலை புறக்கணிப்பது என ஊா் மக்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.