பாளையங்கோட்டை தொகுதிக்கான அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் போட்டியிடுகிறாா். இத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகம் என்ஜிஓ காலனி ஜெபாகாா்டன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் தலைமை வகித்து திறந்து வைத்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் ஆா்.பி.ஆதித்தன், மகபூப்ஜான், சித்திக், ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்ட், ஹயாத், வழக்குரைஞா் ராஜேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் பேசுகையில், பாளையங்கோட்டை தொகுதியின் புகா் பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதிகைநகா், ஜெபாகாா்டன், திருமால்நகா், ஆணையா்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அங்கு கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

பாளை. தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

