தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:23 am IST

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முன்னாள்அமைச்சா் ராஜலெட்சுமி தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலா்கள் இசக்கிமுத்து (பாமக), அருணகிரிசாமி (அமமுக), தென்காசி தொகுதி பாஜக பொறுப்பாளா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது:

தென்காசி தொகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

அதிமுக மாவட்ட பொருளாளா் சாமிநாதன், மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, பாஜக நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அமல்ராஜ், அருவேல்ராஜ், என்.ஹெச்.எம். பாண்டியன், தென்காசி நகரச் செயலா் சுடலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.