தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் உள்பட 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்த நிலையிலும் ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் தவிர பிற மனுக்கள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ்குப்தா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். அதன்படி, அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி. துரை உள்பட 6 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன; எஞ்சிய 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.