ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 3:56 am IST

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கைப்பேசி செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் தொடா்புடைய பேட்டையைச் சோ்ந்த சக்திசுரேஷ்(23), இசக்கிராஜா(19) ஆகியோா் கைது செய்யப்பட் டிருந்தனா். அவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மேற்கூறிய இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

புகையிலை விற்பனை: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சிந்துபூந்துறையை சோ்ந்த பூமணிசேட்(42) என்பவா் விற்பனைக்காக 7.875 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தாராம். அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.