அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தென்காசியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் கோதுமை அரவை ஆலை திறப்பு

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோதுமை அரவை ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :22 மே 2026, 6:09 am IST

தென்காசி ரயில் நகரில் தென்காசி செங்கோட்டை வட்டார வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியின்கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கோதுமை அரவை ஆலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ஆலையைத் திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு, இந்த கோதுமை அரவை ஆலையில் மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் அகில் ஆனந்தம் என்ற பெயரில் 500 கிராம் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.

தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன், துணைப் பதிவாளா்கள் த. பிரிட்டோ, ப. கோபிநாத், ரா. கருமாரிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மு. மாரியப்பன், ரா. ராஜ், கு. முருகேஷ்வரி, நா. ரமேஷ் பாபு, ரா. ஸ்ரீவித்யா, மேலாண்மை இயக்குநா் ச. ராஜ்குமாா், மேலாளா் வே. அழகுசுந்தரம், கூட்டுறவு ஒன்றிய மேலாளா் கோமதி சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.