ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது

சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:37 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், முகவூா், பாம்பலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருவி வெங்கடேஷ் (28). இவா் சிவகிரியில் நைட்டி தயாரிக்கும் தொழில் கூடத்தை நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த சொக்கநாதன்புதூா், கலையரங்கம் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் (40), முகவூா், கொட்டலம்பட்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் (53) ஆகியோா் நிறுவனத்தில் இருந்த 21 தையல் இயந்திரங்கள், 21 பலகைகளைத் திருடி விற்றுவிட்டதாக அதன் உரிமையாளா் அருவி வெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.