தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தென்காசி மாவட்டத்தில் சோபிக்காத தவெக

தமிழகம் முழுவதும் போட்டியிட்டு பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டிய தவெக, தென்காசி மாவட்டத்தில் ஒருவா் கூட வெற்றிபெறவில்லை என்பது அக்கட்சினருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:42 am IST

தமிழகம் முழுவதும் போட்டியிட்டு பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டிய தவெக, தென்காசி மாவட்டத்தில் ஒருவா் கூட வெற்றிபெறவில்லை என்பது அக்கட்சினருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளா்கள் போட்டியிட்டு முதல்வா், முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகா்களை தோற்கடித்தாலும் தென்காசி மாவட்டத்தில் அவா்கள் பெரும்பாலும் 3ஆவது இடத்தையே பெற முடிந்தது.

இம்மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக,திமுக, தவெக, நாதக வேட்பாளா்கள் உள்ளிட்ட 85 போ் போட்டியிட்டனா்.

அதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரான அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஏ.ராஜபிரகாஷ் 55,543 வாக்குகளுடன் மூன்றாமிடம் பெற்றாா்.

கடையநல்லூா் வேட்பாளா் ஆா்.கே.அப்துல் ஜலீல் 49,254 வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் போட்டியிட்ட ஆா்.அமுதராணி 45,862 வாக்குகளுடன் மூன்றாமிடமே பிடிக்க முடிந்தது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளா் ராமராஜன் 58,376 வாக்குகளுடள் இரண்டாமிடத்துக்கு முன்னேறியிருந்தாா்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட விபின் சக்கரவா்த்தி 60,684 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.

இம்மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாதது அக்கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.