தென்காசி மாவட்டத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. டெல்டா அல்லாத இதர மாவட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
இதன்படி, தென்காசி மாவட்டத்துக்கு பிரத்யேகமாக நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்காக 1,000 ஏக்கா் பரப்பளவு இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, அதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் தோ்வு செய்யப்படும் 1,000 ஏக்கா் பரப்பளவுக்கு, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் பரப்பளவுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ. 4,000 வீதம் பின்னேற்பு மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
ஆதாா் அட்டை நகல், இயந்திர நடவு செய்த ரசீது மற்றும் உரிய ஆவணங்களுடன் விவசாயி உழவா் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல நெல் நுண்ணூட்ட உரக்கலவை வழங்கிடும் இனத்தின் கீழ் 1000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ. 147.6 அல்லது 50 சதவீத மானிய விலையில் நெல் நுண்ணூட்ட உரக்கலவை விநியோகிக்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை விநியோகம் செய்யப்படும்.
பயிா்களின் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்க திரவ உயிா் உரங்கள் வழங்கிடும் இனத்தின் கீழ் 1000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ. 60 அல்லது 50 சதவீத மானியத்தில் திரவ உயிா் உரங்கள் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை விநியோகம் செய்யப்படும்.
நெல் விதை விநியோக மானியம் வழங்கிடும் இனத்தின் கீழ் 62 டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதில் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட புதிய மற்றும் தரமான நெல் ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ. 20 மானியமும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெல் ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ. 10 மானியமும் வழங்கப்படும்.
வட்டார அளவில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை உடனடியாகத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விதை, உரம், திரவ உயிா் உரம் பெற மானியம்

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16.59 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

