/

புளியறை அருகே பைக்- லாரி மோதல்: வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியறை அருகே பைக் - கனிமவள லாரி மோதியதில் வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:48 am IST

தென்காசி மாவட்டம் புளியறை அருகே பைக் - கனிமவள லாரி மோதியதில் வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

புளியறை அருகே தெற்குமேடு அங்கன் காலடி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சு. திருமலைக்குமாா் (53). வாத்து மேய்க்கும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு புளியறை அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வாத்துகளை இறக்க வந்தாராம்.

அப்போது, ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி திருமலைக்குமாா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை புளியறை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் செருவல்லூா், எள்ளுவிளை புத்தன்வீட்டைச் சோ்ந்த ஜா. ஜான்பெனட் (26) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.