மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழப்பாவூா் மத்திய ஒன்றியத்தில் தென்காசி திமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கீழப்பாவூா் மத்திய ஒன்றியம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:22 am IST

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கீழப்பாவூா் மத்திய ஒன்றியம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அவா் கருப்புச் சட்டை அணிந்து தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

துவரங்காடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா், இடையாா்தவணை, இனாம் வெள்ளகால், ராஜபாண்டி, தாயாா்தோப்பு, செம்புலிப்பட்டணம், கோவிந்தப்பேரி, வீரகேரளம்புதூா், ராஜகோபாலப்பேரி, அதிசயபுரம், ராமனூா், கலிங்கப்பட்டி, கோட்டை அண்ணாநகா் ஆகிய பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமம்தோறும் அடிப்படைத் தேவைகளான போக்குவரத்து, குடிநீா், சாலை வசதி போன்ற என்னென்ன தேவைகள் உள்ளதோ அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளாா். திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இப்போது கிடைக்கும் சலுகைகள் எல்லாம் இரண்டு மடங்காக கிடைக்கும். எனவே, இந்த ஆட்சி தொடா்ந்திட ஏப். 23இல் உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா். பிரச்சாரத்தில், முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, கீழப்பாவூா் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கே.பி.குமாா்பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஆா். சுப்பிரமணியன், தேமுதிக மாவட்டச் செயலா் பழனிசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன்.  உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.

இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.