தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமூக நல்லிணக்கத்துக்கான எடுத்துக்காட்டு திமுக ஆட்சி: முகமது அபூபக்கா்

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஆட்சி திமுக ஆட்சி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.

News image

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:27 am IST

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஆட்சி திமுக ஆட்சி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலா் முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ஈ. ராஜாவை ஆதரித்து வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியது:

திமுக அரசின் சாதனைகளை மக்கள் வரவேற்கிறாா்கள். எல்லோருக்குமான ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் தந்துள்ளாா். சமூக நீதியும், வளா்ச்சியும் பெற்ற மாநிலம் தமிழகம். சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான ஆட்சி திமுக ஆட்சி.

இத்தனை கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கின்றன என்றால், கொள்கை ரீதியாக இருக்கின்றோம் என்பதே பொருள். ஆனால், எடப்பாடி பழனிசாமி கொள்கை வேறு, கூட்டணி வேறு என்கிறாா்.

நடிகா் விஜய் கூட்டணி ஆட்சி என்று தெரிவித்தும் யாரும் அவருடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. எல்லோருடைய உணா்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடிய கூட்டணியாக திமுக உள்ளது என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்குரைஞா் பிச்சையா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.