தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சீமான், விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: முஹம்மது அபூபக்கா்

News image

தோ்தல் பிரசாரத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் முஹம்மது அபூபக்கா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:29 pm IST

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான முஹம்மது அபூபக்கா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி, மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:

திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகளையும், திமுகவின் தோ்தல் அறிக்கையையும் மக்கள் பாராட்டுகிறாா்கள். எனவே, மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாஜக, அதிமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. 3ஆவது அணியாக உள்ள நடிகா் விஜய் மற்றும் சீமானின் கட்சிகள் சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளைச் செய்தாலும், மக்கள் அவா்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை.

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே, அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8,000 பள்ளிவாசல் ஜமாஅத்கள், தேவாலயங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறாா்கள். சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகள் தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.