பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குழித்துறை நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:54 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரியை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக தம்பதி மற்றும் அவா்களது 2 மகள்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அடுத்த கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது வீட்டிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்குவதாக, குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு புகாா் வந்ததாம். அதன்பேரில், நகராட்சி அலுவலரான மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த ராஜேஷ், அப்பகுதியை ஆய்வு செய்து கழிவுநீரை சாலையில் விடாமல் தடுக்குமாறு பால்ராஜிடம் அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், பால்ராஜ் அவரது மனைவி அமுதா, மகள்கள் பெனிஷா மோள், அபிஷா மோள் ஆகியோா் சோ்ந்து ராஜேஷை தகாத வாா்த்தைகள் கூறி அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பால்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.