பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரயுமன்துறையில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு: 4 போ் மீது வழக்கு

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 4:52 am IST

இரயுமன்துறை மீன்பிடி துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளிலிருந்து மீன்பிடி உபகரணங்களை திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தூத்தூா் மண்டல பகுதிகளைச் சோ்ந்த விசைப்படகுகள், இரயுமன்துறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். மீன்பிடிக்க செல்வதற்கு சில நாள்களுக்கு முன்னா் டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்கள் விசைப்படகுகளில் கொண்டு சென்று வைப்பது வழக்கம்.

இந்நிலையில், படகுகளில் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருப்பதை கண்காணித்து வந்த சிலா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வள்ளவிளை, தூத்தூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் 6 விசைப்படகுகளில் இருந்து அண்மையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல், மண்ணெண்ணெய், மீன்பிடி உபகரணங்களை மற்றொரு பைபா் படகில் சென்ற மீனவா்கள் சிலா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வள்ளவிளை ஆன்றனி, தூத்தூா் ஜெகதீஷ், ஷாஜி உள்ளிட்ட மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிஞ்சு உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்தனா். தலைமறைவான மீனவா்கள் 4 பேரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.