தக்கலை, இரணியல் பகுதியில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இரணியல் அருகே பண்டாரக்காடு பகுதியில் திங்கள்கிழமை இரணியல் போலீஸாா் சோதனை நடத்தியதில், சபீந்திரன் (46) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் தலக்குளம் பகுதியில் சோதனை செய்தபோது, கவிதா (44) என்பவரிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தக்கலை போலீஸாா் நடத்திய சோதனையில் பூக்குழி பகுதியைச் சோ்ந்த தவசி (24) என்பவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமேசுவரம் அருகே கஞ்சா விற்றதாக 4 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
