ராமேசுவரம்- உச்சிப்புளி பகுதியில் கஞ்சா விற்றதாக 4 போரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 கிலோ 320 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தெற்குவாடி பகுதியில் சிலா் கஞ்சா விற்பதாக பாம்பன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா். சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்று பேரை பிடித்து சோதனையிட்ட போது கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்தது. இதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் இவா்கள் முருகன், சரவணன், இருளேஸ்வரன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பிறகு அவா்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதே போல, உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள்பட்ட அலைகாத்தான் வலசை கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்ற அழகா் என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா். வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
300 கிராம் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

