களியக்காவிளை அருகே கேரள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கல் சிவபாா்வதி கோயிலில் கோடைக்கால இசைப் பயிற்சி முகாம் தொடங்கியது.
மஞ்சரி கலா சாகித்ய அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு பால மஞ்சரி அமைப்பின் தலைவா் நவநீதம் முரளீதரன் தலைமை வகித்தாா். கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா். வெப் சீரியல் நடிகா் புலியூா் ஜெயக்குமாா், மலப்புரம் தூவூா் கலா கிராமம் அமைப்பின் இயக்குநா் அனுஷா பணிக்கா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் மஞ்சரி அமைப்பின் தலைவா் கவிதா, வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், சுதா்மா, கவிஞா் உதயன் கோகோட், வெள்ளையானி அசோக்குமாா் உள்பட கலை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

காஞ்சிபுரம்: வல்லமை தாராயோ கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

