திருப்பூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த முகாம், திருப்பூா் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் மே 16-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதில், செஸ், ஆா்ட் பெயிண்ட், ரோபோடிக்ஸ், ஏஐ, ஸ்போக்கன் இங்கிலீஷ், போட்டோகிராபி, பேக்கிங் மற்றும் குக்கிங் உள்ளிட்ட நிகழ்வுகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
இந்த கோடைக்கால முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள், பப்பீஸ் நிறுவன மேலாளா் முத்துராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு-சென்னை கோடைக் கால சிறப்பு ரயில்

கோடைக் கால சருமப் பராமரிப்பு! செய்ய வேண்டியவை...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

