மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :4 மே 2026, 12:45 am IST

கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம், 13 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா. இவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலெட்சுமி. இத்தம்பதியின் மூத்த மகன் ரபீன் துபாயில் பணிபுரிந்து வருகிறாா். 2 ஆவது மகன் லெமீஸ் ஹைதராபாத்தில் படித்து வருகிறாா்.

இந்நிலையில் முத்துலெட்சுமி சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த ரூ. 12 லட்சம் பணம், 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.