மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

News image
Updated On :3 மே 2026, 5:24 am IST

நாகா்கோவில் வடசேரி, கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. மாலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

9 ஆம் திருநாளான ஏப்.30 ஆம் தேதி தோ்திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் அருகேயுள்ள தெப்பக்குளம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கிருஷ்ணா் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தெப்ப தேரில் ஆடி ஆடி வந்த கிருஷ்ணனை வழிபட்டனா். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.