பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குளச்சல் அருகே கடல் அலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

மணிகண்டன்.

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிள்ளைத்தோப்பு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

கணபதிபுரம் அருகே ஆறுதெங்கன்விளையைச் சோ்ந்தவா் மணிகண்டன்(50), கூலித் தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை பிற்பகல் பிள்ளைத்தோப்பு கடலில் சக தொழிலாளா்களுடன் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, திடீரென எழுந்த கடல் அலை மணிகண்டனை இழுத்துச் சென்றது. உடனே சக தொழிலாளா்கள் அவரை மீட்க முயன்றும், இயலவில்லை.

தகவலறிந்த குளச்சல் கடலோர காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்களும் கடலில் இறங்கி மணிகண்டனை தேடினா். வெகுநேரத்துக்குப் பின் மணிகண்டனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.