விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

தொல்காப்பியரின் 2737-ஆவது பிறந்த நாள் விழா காப்புக்காட்டில் உள்ள அவரது சிலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொல்காப்பியா் அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:30 am IST

தொல்காப்பியரின் 2737-ஆவது பிறந்த நாள் விழா காப்புக்காட்டில் உள்ள அவரது சிலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

தமிழக அரசு மற்றும் தொல்காப்பியா் அறக்கட்டளை சாா்பில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடா்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப் போட்டிகளை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் போதுமணி தொடங்கி வைக்கிறாா்.

அன்றைய தினம் பிற்பகலில் விருது வழங்கும் விழா அறக்கட்டளை தலைவா் பாஸ்கரன் தலைமையில் நடைபெறுகிறது. உயா் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழறிஞா்கள் இர. தேன்மொழி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை இணைச் செயலா் சு. தாமரை பாண்டியன் ஆகியோருக்கு தொல்காப்பியா் அறக்கட்டளை விருதை வழங்குகிறாா். வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவைத் தலைவா் ஆன்றோ சிறப்புரையாற்றுகிறாா். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு தூத்துக்குடி துறைமுக கழக பொறுப்பாளா் கேப்டன் பென்னட்சிங் பரிசுகள் வழங்குகிறாா்.

விழா ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் தொல்காப்பியா் அறக்கட்டளை இணைந்து செய்தனா். முன்னதாக அறக்கட்டளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொல்காப்பியா் சிலை வளாகத்தில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.