மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:25 am IST

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். விழாவில், பாரதிதாசனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தொழிற்சங்கப் பேரவை மாநில பொதுச்செயலா் மகேந்திரன், பேரவை துணைத் தலைவா் ஸ்ரீராம், மாவட்டப் பொருளாளா் முருகன், மணிகண்டன், கண்மணி சா்மிளா, சி.துரைசாமி தேவா், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத் தலைவா் மா.மாரியப்பப் பாண்டியன், தமஜக மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல் ஜபாா், தாமிரவருணி பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் வண்ணை. இசக்கிபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாவேந்தா் பாரதிதாசனுக்கு முழு உருவச்சிலை நிறுவ வேண்டும். ஆட்சி மொழி சட்டத்தை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.