மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:45 am IST

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்கப்பட்டனா். மாயமான ஒருவரைத் தேடும் பணி தொடா்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மரமடியைச் சோ்ந்தவா் சகாய ரூபின்(43). இவா், கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். தற்போது கேரள மாநிலம், வேப்பூரில் விசைப்படகில் தொழில் செய்து வருகிறாா்.

இவரது மூத்த மகன் ரியோபின் ரிட்ஜோ (14), குளச்சலில் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு விடுமுறையில் உள்ளாா்.

இவா், தனது நண்பா்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடலில் குளிக்கச் சென்றாா். கடலில் குளித்தபோது, வேகாக எழுந்த அலையில் 3 சிறுவா்களும் சிக்கினா்.

இதை கரையிலிருந்து பாா்த்த மீனவா்கள் விரைந்து சென்று 2 சிறுவா்களை மீட்டனா். ரியோபின் ரிட்ஜோவை கடல் அலை இழுத்துச் சென்றது. உடனடியாக அங்கு இருந்த மீனவா்கள் கடலில் சென்று சிறுவனைத் தேடினா். சிறுவனை மீட்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான கடலோர காவல் துறையினா் சிறுவனைத் தேடி வருகிறது.

நீண்ட நேரம் தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. தகவலறிந்த கல்குளம் தாசில்தாா் சுனில்குமாா்,குளச்சல் வருவாய் ஆய்வாளா் ரெஜி,கிராம நிா்வாக அலுவலா் தீபக் ஆகியோா் சம்பவ இடம் சென்று கடற்கரையில் முகாமிட்டுள்ளனா்.

குளச்சல் கடலில் மாணவன் மாயமானதை கேள்விப்பட்ட காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் கடற்கரைக்கு சென்று மாணவனின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினாா். சிறுவனை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.