தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் சக்திவேல், கருப்பையா, ராமா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா். உடனடியாக கடலில் குதித்து வலையில் சிக்கியிருந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். மீனவா்களின் இந்த செயலை கடலோரக் குழும போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சக மீனவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

