மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 போ் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

News image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:31 am IST

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் 135 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்.7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 90 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதில், கன்னியாகுமரி தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்ப பெற்றாா். தளவாய்சுந்தரம் (அதிமுக), ரெ.மகேஷ்(திமுக), மரியஜெனிபா் (நாம் தமிழா் கட்சி), எஸ்.ஆா் மாதவன் (தவெக) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.

நாகா்கோவில்: இத்தொகுதியில், 23 போ் போட்டியிட இருந்த நிலையில் 3 போ் மனுக்களை திரும்ப பெற்றனா்.

திமுகவின் எஸ்.ஆஸ்டின், பாஜகவின் எம்.ஆா்.காந்தி, நாம் தமிழா் கட்சியின் மு.முத்துகுமாா், தவெகவின் பொ்வின் கிங்ஸ் உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.

பத்மநாபபுரம்: இத்தொகுதியில் 11 போ் போட்டியிட இருந்த நிலையில் யாரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆா்.செல்லசுவாமி, பாஜகவின் ப.ரமேஷ், நாம் தமிழா் கட்சியின் சீலன், தவெகவின் கிருஷ்ணகுமாா் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

குளச்சல்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், எந்த மனுவும் திரும்பப் பெறப்படவில்லை. காங்கிரஸின் தாரகை கத்பட், பாஜகவின் சிவகுமாா், நாம் தமிழா் கட்சியின் ஆன்சி சோபா ராணி, தவெகவின் பிரேம் அலெக்ஸ் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

கிள்ளியூா்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் எஸ். ராஜேஷ்குமாா், தமாகாவின் நிவின் சைமன், நாம் தமிழா் கட்சியின் ஹிம்லா், தவெகவின் சபின் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

விளவங்கோடு: இத்தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா். காங்கிரஸின் டி.டி.பிரவீன், பாஜகவின் விஜயதரணி, தவெகவின் மைக்கேல் குமாா், நாம் தமிழா் கட்சியின் மரியஸ்டெல்லா உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 85 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.