ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தாமரை மாலை அணிந்து...

News image

விஜயதரணி (கோப்புப்படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 4:39 am IST

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

விளவங்கோடு தொகுதியில் 2011, 2016, 2021 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற எஸ். விஜயதரணி, 2024-ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகினாா். பின்னா், அவா் பாஜகவில் இணைந்தாா்.

அவரை விளவங்கோடு தொகுதி வேட்பாளராக பாஜக தற்போது களமிறக்கியதையடுத்து, விளவங்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூர்ராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, அவா் கட்சியின் சின்னமான தாமரை மலராலான மாலையை அணிந்து வந்திருந்தாா்.

அப்போது, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மாவட்ட பொதுச்செயலா் வி.எஸ். நந்தினி, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சிவ குற்றாலம், மேல்புறம் ஒன்றியச் செயலா் ஷைன் ஜோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, வேட்பாளா் எஸ். விஜயதரணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து குழித்துறை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தோ்தல் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.