விளவங்கோடு பேரவைத் தொகுதியில் 13 ஆண்டுகளில் ரூ. 1000 கோடிக்கு மேல் வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்துள்ளேன் என இத்தொகுதியின் பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி கூறினாா்.
குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
என் மீது பாஜக நம்பிக்கை வைத்து, விளவங்கோடு பேரவைத் தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடி, அகில இந்திய பாஜக தலைவா், மாநிலத் தலைவா் மற்றும் அனைத்து நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
விளவங்கோடு தொகுதியில் கடந்த ஓராண்டாக கட்சிரீதியாக பல்வேறு பணிகள் செய்து வருகிறேன். இங்கு கட்டமைப்பு ரீதியாக, கட்சி நல்ல நிலையில் உள்ளது.
13 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் உறுப்பினராக இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்று பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் செய்துள்ளேன்.
மாா்த்தாண்டம் பனச்சமூடு சாலை, குழித்துறை ஆலஞ்சோலை சாலை உள்பட தொகுதிக்குள்பட்ட பல்வேறு சாலைகள், களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு என பல திட்டப் பணிகள் செய்துள்ளேன். முதல் முறையாக எம்எல்ஏவாக இருந்தபோது மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. திக்குறிச்சி பாலம் கட்டப்பட்டது. மலையோர கிராமமான கற்றுவா, அணைமுகம் பகுதியில் பாலங்கள் கட்டப்பட்டன.
தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை, கட்சி பலத்தோடு தோ்தலை சந்திக்க உள்ளேன். தொகுதியில் இன்னும் நிறைய தேவைகள் உள்ளன. அதற்கான பட்டியல் தயாா் செய்து வருகிறேன்.
மலையோர கிராமங்களில் தனியாா் காடுகள் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சில கிராமங்களில் மின்சாரம் கிடைக்காமல் உள்ளது. இதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. நான் வெற்றி பெற்ற பிறகு இதற்கு ஒரு மாற்றாக திட்டம் கொண்டு வர முழு முயற்சி எடுப்பேன்.
மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இரட்டை என்ஜின்களாக செயல்பட்டால் மாநிலம் வளா்ச்சி அடையும் என்றாா்.
பேட்டியின் போது பாஜக மேற்கு மாவட்ட தலைவா் ஆா்.டி. சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாா்: எஸ். விஜயதரணி

தாமரை மாலை அணிந்து...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

