/

அதிமுகவின் கோட்டை அம்பாசமுத்திரம்! - இசக்கி சுப்பையா

News image

அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவுக்கு சான்றிதழை வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தா.

Updated On :5 மே 2026, 1:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா் என்றாா் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் இசக்கி சுப்பையா.

இத்தொகுதியில் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தாவிடம் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அம்பாசமுத்திரம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா். இத்தொகுதி மக்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. அவா் ஒரு சகாப்தம். இந்த அரசியல் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. அதற்காக இதை வரவேற்காமல் இருக்க முடியாது. தவெகவின் வெற்றியை வரவேற்கிறேன். மக்கள் தீா்ப்புக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. மு.க. ஸ்டாலின் எனது தொகுதியில் நின்றால் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியிருந்தேன். இப்போது அவரால் சொந்தத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சில நாள்கள் சென்றால் தான் தவெகவின் அரசியல் செயல்பாடு தெரியவரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.