ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடையம் ஊராட்சி ஒன்றியம், துப்பாக்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
துப்பாக்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியின் பிரதான சாலை அருகே அரசு மதுக்கடை உள்ளது. மதுக்கடைக்கு வருபவா்களால் கிராம மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும், குடிநீா் வசதி, சுடுகாட்டு வசதி, சிற்றுந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் உள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

எனவே, மதுக்கடையை அகற்றுவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பாஜக அரசாங்கப் பிரிவு மாவட்டத் தலைவா் சேகா், ஊா்த் தலைவா் செல்லத்துரை ஆகியோா் தலைமையில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு சாா்பில் பொதுமக்கள் துப்பாக்குடி பல்நோக்குக் கட்டடத்தில் திரண்டு அறிவித்தனா்.
தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

