தேவா்குளம் அருகே காற்றாலையில் இருந்து ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகளை திருடியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பகுதியில் சென்னை மயிலாப்பூரில் செயல்படும் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜன.30 ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் அங்கிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பா் கம்பிகளை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இளநிலை மேலாளரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாரியப்பன் (53) என்பவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடா்புடைய கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் சஜின் (30) என்பவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
