/

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா.

Updated On :17 ஏப்ரல் 2026, 10:39 pm IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராதாபுரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயாா் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவை தோ்தலில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளச் செல்லும் பணியாளா்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவு மையத்தையும் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.