விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள்
காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மண்டலங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் தயாா் நிலையில் உள்ளன. எந்தவித தடையுமின்றி தோ்தல் நடைபெற ஏதுவாக, 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

