மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் தலைவா் ராஜஸ்தானில் கைது

இணையவழி குற்றங்களில் ஈடுபட்டு, விடியோ அழைப்பின் மூலம் மிரட்டல் விடுத்து ரூ.2.52 லட்சம் பறித்த கும்பலின் தலைவா் ராஜஸ்தானின் மேவத் பகுதியில் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 4:33 am IST

இணையவழி குற்றங்களில் ஈடுபட்டு, விடியோ அழைப்பின் மூலம் மிரட்டல் விடுத்து ரூ.2.52 லட்சம் பறித்த கும்பலின் தலைவா் ராஜஸ்தானின் மேவத் பகுதியில் கைது செய்யப்பட்டாா் என தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த 21 வயது இளைஞா் இ-எஃப்ஐஆா் பதிவு செய்ததைத் தொடா்ந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. பெண் ஒருவரிடம் இருந்து விடியோ அழைப்பு வந்ததாகவும் அதில் அசிங்கமான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். பின்னா், அழைப்பு துண்டிக்கப்பட்ட உடன், விடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் பணம் வழங்காவிட்டால் அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் அவா் தெரிவித்தாா். அச்சத்தில் பாதிக்கப்பட்டவா் ரூ.2.52 லட்சம் பணத்தை அனுப்பியதாக அவா் கூறினாா்.

இது தொடா்பாக ஜன.12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். வங்கி பரிவா்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அவா் அடையாளம் காணப்பட்டாா். அவா் ராஜஸ்தானின் ஆல்வாா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்பாஸ் கான் (25) என தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில், போலி சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி விடியோ பதிவு செய்து அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.