மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது

தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2026, 5:49 am IST

நமது நிருபா்

புது தில்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

நாட்டின் உயரிய இலக்கிய விருது சாகித்திய அகாதெமி விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய படைப்பாளிகளுக்கு மத்திய அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் பரிசுத்தொகையாக ரூ.1 லட்சமும் , பட்டயமும் வழங்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியம், விமா்சனம் போன்ற பிரிவில் எழுத்தாளா்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ் மொழியில் வெளியான ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் சிறுகதையின் தடங்கள் எனும் நூல் 1913 -1970 வரையிலான தமிழ் சிறுகதை உலகின் பரிமாண வளா்ச்சியை விரிவாக ஆராயும் 900 பக்கங்களுக்கு மேலான ஒரு முக்கியமான ஆவணமாகும்.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைகளின் வோ்கள், போக்குகள் மற்றும் படைப்பாளிகளை பற்றி ஆராய்கிறது. தமிழ் சிறுகதைகளின் முக்கிய ஆவணமாக கருதப்படும் இந்நூலுக்கு மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தில்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்நூலின் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பட்டயமும் வழங்கி கௌரவிக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.