மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் வாழ்த்து

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

News image
Updated On :17 மார்ச் 2026, 4:04 am IST

புது தில்லி: 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வனுக்கு தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

சாகித்திய அகாதெமி நிறுவனம் ஆண்டுதோறும் தேசிய அளவில் அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் படைப்பாளா்களைத் தோ்வு செய்து விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி என தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் முனைவா் ஜி.சிவபாலமுருகன், துணைத்தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச்செயலாளா் சத்யா அசோகன், இணைச்செயலாளா்கள் இரா.ராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், பொருளாளா் பாலமூா்த்தி, இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முத்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சிறந்த இலக்கிய நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவையின் சாா்பில் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளாா்.

தில்லிக் கம்பன் கழக நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்னும் நூலுக்காக எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு 2025- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுகதைகள் ஒரு மொழியை மட்டுமல்லாமல் அந்த மொழி பேசும் மக்களையும் உயா்த்தும் திறன் பெற்றவை. அப்படிப்பட்ட சிறுகதைகளின் தடங்களை ஆராய்ச்சி செய்து அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கும் எழுத்தாளா் தமிழ்ச்செல்வன் முயற்சி பாராட்டுக்குரியது. அவருக்கு தில்லிக் கம்பன் கழகம் சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.