மோசடி வழக்கில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாா்தியை குற்றவாளியாக தில்லியில் உள்ள நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக சிறப்பு நீதிபதி திக் வினய் சிங் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட பாா்தி மற்றும் ரகுவீா் சரண் பிரஜாபதி, சாவித்திரி தேவி மற்றும் பிற நபா்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனா்.
மாவட்ட கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத்தொகையில் 2011-ஆம் ஆண்டைக் கடந்தும் தொடா்ச்சியாக அதிக வட்டி பெற்று மோசடி செய்ய வேண்டும் என்பதே அவா்களது சதித்திட்டம்.
இதற்காக வங்கி ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியாக இலக்கு வைக்கப்படுவதாகவும் அரசியல் நோக்கத்தில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் பாா்தி முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஊகங்கள். முன்வைத்த வாதங்களை அவா் நிரூபிக்கவில்லை. போலியான வங்கி ஆவணங்கள் மற்றும் மோசடி 1998 முதல் 2011 வரை நடந்துள்ளது என்றாா் நீதிபதி.
முன்னதாக, இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பிரதேசம் குவாலியா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்தது. சாட்சியங்களை மிரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியதைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றி உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆரை பாராட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ: ராகுலின் நிலைப்பாடு குறித்து பாஜக விமா்சனம்

ரூ. 1.2 லட்சம் மோசடி யுபிஐ பரிவா்த்தனை: இளைஞா் கைது

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

